For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பஸ்ஸை குண்டு வைத்துத் தகர்த்த புலிகள்
கொழும்பு:
இலங்கையின் வடக்கு வவுனியாவில் ஒரு பஸ்ஸை விடுதலைப் புலிகள் குண்டுவைத்துத் தகர்த்தனர்.
பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு பஸ்ஸைஅவர்கள் தகர்த்தனர்.
வவுனியா பஸ் நிலையத்திலிருந்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் 19 பயணிகளுடன்அருகில் உள்ள ஊருக்கு ஒரு பஸ் புறப்பட்டது. பஸ் நிலையத்தை விட்டு வெளியேவந்த பஸ்ஸை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் பஸ்ஸில் இருந்த அனைவரையும் பஸ்ஸிலிருந்து இறங்கும்படி கூறிவிட்டுபஸ்ஸில் குண்டு வைத்துத் தகர்த்தனர். இச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதற்கிடையே இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தில் பல்வேறு பகுதிகளில்ராணுவத்தினருடன் நடந்த மோதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Thursday, July 20, 2000, 5:30 [IST]