தமிழகத்தில் இன்று
மாமியாரின் நகைகளை கொள்ளையடித்த மருமகள்
சென்னை:
மாமியார் நகைகளைக் கொள்ளையடித்த மருமகள் கைது செய்யப்பட்டார். எங்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத மாமியாருக்கு புத்தி புகட்டுவதற்காகஇக் குற்றத்தை செய்ததாக போலீசில் மருமகள் வாக்குமூலம் அளித்தார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் வசிப்பவர் சுரேஷ்குமார். இவரது மனைவி சரோஜா. சரோஜா ஏற்கனவேதிருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தவர். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுரேஷ் குமார்.
இந்த திருமணத்தை சுரேஷ் குமாரின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டுக்கே வரக் கூடாது என்று துரத்தி அனுப்பி விட்டார் சுரேஷ் குமாரின்தாயார்.
இதனால் சுரேஷ்குமாரும், சரோஜாவும் தனியே வசித்து வந்தனர். வறுமை அவர்களை வாட்டியது. இந்த நேரத்தில் துருக்கி நாட்டில் வாழும் ஒருவருக்குசிறுநீரகம் தேவை என்ற தகவல் இவர்களுக்கு கிடைத்தது. பணத்துக்காக சிறுநீரகத்தை விற்க சரோஜா முன் வந்தார்.
சுரேஷ்குமாரும், சரோஜாவும் துருக்கி நாட்டுக்குச் சென்று சிறுநீரகத்தை விற்று விட்டு வந்தனர். அதற்கான செலவையும் சிறுநீரகத்தை விலைக்குவாங்கியவரே ஏற்றுக் கொண்டார். எல்லா செலவும் போக கையில் 60 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சரோஜாவால் வீட்டு வேலை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் மனைவியை வீட்டுக்கு அழைத்துச்சென்றார் சுரேஷ்குமார்.
மருமகளை வேண்டாவெறுப்பாக ஏற்றுக் கொண்டார் மாமியார். மாமியாரின் கொடுமைகளை சகித்துக் கொண்டே உடல் நலம் தேறிய மருமகள்சரோஜா, நகைகளை மாமியார் எங்கே வைத்துள்ளார் என்று தெரிந்து கொண்டார்.
குணமாகி தனது வீட்டுக்கு திரும்பிய சில நாட்களில் மாமியார் வீட்டுக்கு தனியாக சென்று பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்சரோஜா. நகைகளைக் காணவில்லை என்று போலீசில் மாமியார் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் சிக்கிய சரோஜா, நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன. என்னைக் கொடுமைப்படுத்தியமாமியாருக்குப் பாடம் புகட்டுவதற்காக அவரது நகைகளைத் திருடியதாக போலீஸ் விசாரணையில் சரோஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications