தமிழகத்தில் இன்று
ராணுவத்துடன் மோதல்: 12 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் வெவ்வேறு இடங்களில் ராணுவத்துடன் புதன்கிழமைநடந்த சண்டையில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
கொழும்புத் துறைப் பகுதியில் நடந்த மோதலில் 5 புலிகளும், வெல்வெட்டித்துறையில் 5 பேரும், நாகர்கோயிலில் 2 பேரும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
காட்கோவளம் என்ற இடத்தில் நடந்த கண்ணி வெடி விபத்தில் ராணுவ வீரர்கள்இருவர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, நெல்லையடி நகரில் இம்மானுவேல் தேவராஜன் ராஜாகுழந்தான் என்றவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனது தாயாருடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாதநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார். சம்பவ இடத்திலேயேராஜாகுழந்தான் இறந்தார்.
தனது சொந்த பயன்பாட்டுக்காக விடுதலைப் புலி அமைப்பின் பெயரில் அவர் நிதிதிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications