தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவை மண்டலத்துக்கு புதிய என்.சி.சி. கமாண்டர்
கோவை:
கோவை மண்டலத்துக்குப் புதிய என்.சி.சி. கமாண்டராக ராமச்சந்திரன்நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இப் பதவியில் உள்ள குப்தா ஓய்வு பெறுவதைஅடுத்து இப் புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள53 கல்லூரிகள் மற்றும் 150 பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையின்(என்.சி.சி.) கமாண்டராக இவர் பொறுப்பு வகிப்பார்.
சென்னை ரெஜிமண்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் 25-வது ராஷ்ட்ரீய ரைபிள் படை,இந்திய அமைதிப் படைகளில் பணியாற்றி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படைப் பிரிவிலும் அவர் பணியாற்றி உள்ளார்.












Click it and Unblock the Notifications