தமிழகத்தில் இன்று
குற்றாலத்தில் போலீஸ்-வாலிபர்கள் கட்டிப்புரண்டு சண்டை
சென்னை:
குற்றாலம் ஐந்தருவியில் குடிபோதையில் போலீஸாருடன் தகராறு செய்து அவர்கள்ை தாக்கிவிட்டு தப்பியோடமுயன்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
தூத்துக்குடி அருகே உள்ள வல்லநாட்டைச் சேர்ந்த 10 பேர் குற்றாலத்துக்கு வந்தனர். 10 பேரும் நன்றாகக்குடித்துவிட்டு அருவிப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்தனர்.
இதையடுத்து அவர்களை அப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஜெகந்நாதன்கண்டித்தார். ஆனால், அவர்கள் தொடர்ந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த ஜெகந்நாதன், அவர்களைஅருவிப் பகுதியில் இருந்து வெளியேற்ற முயன்றார்.
இதனால், குடிபோதையில் இருந்த அவர்கள், ஜெகந்நாதனை சுற்றி நின்றுத் தாக்கினர். வாலிபர்களின் அடி உதைதாங்காமல் தண்ணீரில் விழுந்தார் ஜெகநாதன். உடனே அவர் தன்னிடமிருந்த விசிலை எடுத்து ஊதினார்.
இதைக் கேட்டு அருவியின் மற்ற பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராம் லட்சுமணன்மற்றும் போலீஸ்காரர்கள் ம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர்.
அவர்களையும் அந்த வாலிபர்கள் தாக்கினர். பதிலுக்குப் போலீஸ்காரர்களும் திரும்பித் தாக்கினர். இருதரப்பினரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.
இந்த சண்டைக்கு நடுவே ஏற்கனவே அடிவாங்கிய ஏட்டு ஜெகநாதனைத் தூக்கி வாலிபர்கள் தண்ணீரில் வீசினர்.இதில் அவரது கால் முறிந்தது.
இதைப்பார்த்ததும் காரில் ஏறி தப்பி ஓட வாலிபர்கள் முயன்றனர். போலீஸார் துரத்திச் சென்று அவர்களில்பேச்சுமுத்து, ஆறுமுகம், சப்பாணிமுத்து, சுடலைமுத்து ஆகிய 4 பேரைப் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications