தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
லாரி மோதி இலங்கைத் தமிழ் அகதி சாவு
திருச்சி:
சைக்கிளில் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி, லாரி மோதி இறந்தார்.
திருச்சி அருகே உள்ள கோட்டபட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த அருமைநாயகம்என்ற இலங்கைத் தமிழ் அகதி, புதன்கிழமை சைக்கிளில் வெளியே சென்றார்.
திருச்சி அருகே அவர் மீது திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான லாரி மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே அருமைநாயகம் இருந்தார்.
சைக்கிள் மீது மோதிய வேகத்தில் லாரியும் கவிழ்ந்ததில் அதில் இருந்த துப்புரவுப்பணியாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவமைனயில்சேர்க்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications