தமிழகத்தில் இன்று
பள்ளி மாணவர்களைக் கடத்தும் கும்பலைப் பிடிக்க போலீஸ் தீவிரம்
சென்னை:
சென்னையில் பள்ளி மாணவர்களைக் கடத்தும் கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாநிலங்களில் பிச்சை எடுப்பதற்கும், கண்கள் மற்றும் சிறுநீரகங்களை எடுத்து விற்பனை செய்வதற்காகவும் மாணவர்கள் கடத்தப்படுவதாககூறப்படுகிறது.
குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கடத்திச் சென்று பிச்சை எடுக்க வைக்கும் கும்பலின் நடமாட்டம் சென்னை நகரில் அதிகரித்துள்ளதாகபோலீஸுக்கு தகவல் வந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் புதன்கிழமை கடத்தப்பட்டதை அடுத்து, அக்கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீஸார்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு மாநகராட்சிப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் சம்பத்குமார் (10) மற்றும் 3-ம் வகுப்புப் படிக்கும் அவனதுதம்பி சிவநேசன் (8) இருவரையும் ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்றது.
இது குறித்து அவர்களது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். விசாரணையில் இருவரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.
உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று சிறுவர்களை மீட்டனர். அவர்களைக் கடத்திய கும்பல் தலைமறைவாகிவிட்டது.