தமிழகத்தில் இன்று
இங்கிலாந்தைத் தோற்கடித்தது மே.இ.தீவுகள் - கடைசி ஓவரில் கிடைத்த ஆறுதல் வெற்றி
நாட்டிங்ஹாம்:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில், ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள்கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றுவருகிறது.
இங்கிலாந்துக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே கடைசி லீக் ஆட்டம்நாட்டிங்ஹாமில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே இறுதி ஆட்டத்துக்குஇங்கிலாந்தும், ஜிம்பாப்வேயும் தகுதி பெற்றுவிட்டன. சனிக்கிழமை இறுதி ஆட்டம்நடைபெற உள்ளது.
இதனால், வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒரு சம்பிரதாய ஆட்டமாகவேநடைபெற்றது. இப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில்இங்கிலாந்தைத் தோற்கடித்து ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
50 ஓவரில் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனதுஇன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 5 பந்துகளில் 3விக்கெட்டுகளை அந்த அணி இழந்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கடைசி ஓவரை சிறப்பாக வீசி தனதுஅணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இங்கிலாந்து அணியின் அலெக் ஸ்டீவர்ட் அவுட்டாகாமல் 100 ரன்கள் எடுத்தார்.முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள்எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் ஆட்ட நாயகராகத் தேர்வுசெய்யப்பட்டார்.