தமிழகத்தில் இன்று
4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகள் கண்டுபிடிப்பு
ஹம்பர்க்:
4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்தின் அடிச்சுவடுகளும், சிலஎலும்புகளும் கிடைத்துள்ளன.
மேலும், அப்போது வாழ்ந்த மனித இனம் பின்பற்றிய சமூக, கலாசார மற்றும்பொருளாதார நிலைகளை பறைசாற்றும் பொருட்களும் கிடைத்துள்ளன. இது தவிர,அப்போது வாழ்ந்த விலங்குகளின் எலும்புகளும் நிறைய கிடைத்துள்ளன.
ஜெர்மனியின் மையப்பகுதியில் உள்ள சாவண்டன் ஏரிக்கு அருகே பேராசிரியர்டயட்ரிக் மானியா தலைமையில் புதை பொருள் ஆராய்ச்சிகள் கடந்த 30ஆண்டுகளாக மேற்கொண்ட புதைபொருள் ஆய்வில் இவற்றைக்கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ள ஆய்வில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம்வகையான புதை பொருட்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அதில் மிக முக்கியமானது 3 லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தமனிதனின் தாடை எலும்பாகும். இது தவிர பண்டைய மனிதர்களின் 28 மண்டைஓடுகள் மற்றும் 8 பற்கள் கிடைத்துள்ளன.
கிடைத்த பொருட்களில் அக் காலத்தில் இருந்த மரங்கள், செடி, கொடிகள் மற்றும்விலங்குகளின் பாகங்கள்தான் அதிகமாக உள்ளன.
இதுவரை மொத்தம் 1,500 சதுர மீட்டர்கள் பரப்பளவில் மட்டுமே இந்த ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதியை முழுவதுமாக ஆய்வுசெய்யும் மேலும் 10 ஆண்டுகள் ஆகும் என்றார் மானியா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications