தமிழகத்தில் இன்று
பெரிய அளவில் கார் ஏற்றுமதியைத் தொடங்கியது ஹுண்டாய் நிறுவனம்
சென்னை:
சென்னையில் உள்ள ஹுண்டாய் இந்திய நிறுவனம் பெரிய அளவிலான கார்ஏற்றுமதியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.எஸ். கிம், கார் ஏற்றுமதியைத் துவக்கிவைத்துப் பேசியதாவது:
ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் கார் தயாரிப்புத் தொழிற்சாலையில் சென்னையில்நிறுவப்பட்டுள்ளது.
இந் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் பெரிய அளவிலான ஏற்றுமதி சென்னைதுறைமுகத்தின் மூலம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஹுண்டாய் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும்நடவடிக்கையில் புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் இந்த கார் ஏற்றுமதியில்நைஜீரியா நாட்டுக்கு 350 சான்ட்ரோ, 410 ஆஸன்ட் என மொத்தம் 760 கார்கள்ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்கெனவே, அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்குசிறிய வகைக் காரான சான்ட்ரோ கார்கள் கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆனால், இப்போது நைஜீரியாவுக்கு அனுப்பப்படுவதுதான் பெரிய அளவிலானஏற்றுமதியாகும்.
கார்கள் தவிர கார்கள் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் ஏற்றுமதிசெய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2007-ம் ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் கிம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications