தமிழகத்தில் இன்று
ரூ.727 கோடிக்கு நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி:
ரூ. 727 கோடி மதிப்புள்ள நேரடி அன்னிய முதலீடுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதுஎன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன்தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய பொருளாதாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் நேரடி அன்னியமுதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
35 பிரிவுகளின் கீழ் ரூ. 727 கோடி மதிப்புள்ள நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் கீழ்இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், மருத்துவம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு,தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு, கம்ப்யூட்டர் சாப்ட்வேர், இ-காமர்ஸ், யமுனைஆற்றின் குறுக்கே பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த நேரடிஅன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாறன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications