தமிழகத்தில் இன்று
ரூ.15 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்: முன்னாள் எஸ்.ஐ. உள்பட 4 பேர் கைது
வேலூர்:
வேலூரில் கடந்த வாரம் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுவன் போலீஸாரால் பத்திரமாகமீட்கப்பட்டான். அவனைக் கடத்திச் சென்று அடைத்து வைத்த முன்னாள்சப்-இன்ஸ்பெக்ட உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
வேலூரைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி முகமது யூசுபின் மகன் சோகைல் அகமது,சத்தவாச்சாரியில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் படித்து வந்தான்.
கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒருகும்பல் அவனைக் கடத்திச் சென்றது.
இது தொடர்பாக முகமது யூசுப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணைநடத்தினர்.
விசாரணையில், காட்பாடியில் காங்கேயநல்லூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில்சோகைல் அகமது இருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார் அங்கு சென்றுசிறுவனை மீட்டனர்.
இது தொடர்பாக, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன், முகமது யூனுஸ், சம்பத்,நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சோகைல் அகமதுவைக் கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள், அவனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.15 லட்சம் கொடுத்தால்தான் மகனை விடுவிப்போம்என்று மிரட்டினர்.
செல் போன் மூலம் கடத்தல்காரர்கள் பேசியதை அடுத்து அவர்கள் இருக்கும்இடத்தைப் போலீஸார் கண்டுபிடித்து கடத்தப்பட்ட சிறுவனை மீட்டனர்.












Click it and Unblock the Notifications