தமிழகத்தில் இன்று
அரசியல் கட்சி தொடங்க கம்ம நாயுடு மகாஜன சங்கம் பரிசீலனை
கோவை:
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம்பரிசீலிக்கும் என அத் தலைவர் கெங்குசாமி நாயுடு தெரிவித்தார்.
கோவை மாவட்டம், உடுமலையில் உண்ணாவிரத ஆயத்த மாநாட்டில் அவர்பேசியதாவது:
கம்ம நாயுடு சமுதாயத்தினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 27 இடங்களில்உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாதிச் சங்கங்கங்களுடன் பேச தமிழக அரசு தயங்குகிறது. அரசியல் கட்சிகளுடன்தான் பேசுகின்றனர். எனவே ஜாதிச் சங்கங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளாக மாறிவருகின்றன.
நமது சமுதாயத்திலும் 70 சதவீதம் பேர்அரசியில் கட்சியாக நமது சங்கத்தைமாற்றவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நாம் எந்த ஜாதிக்கும் விரோதியில்லை.
எனவே, அரசியல் கட்சி துவங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கெங்குசாமி நாயுடு.
கூட்டத்துக்கு நாராயணசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலர் நடராஜன்பேசினார்.












Click it and Unblock the Notifications