தமிழகத்தில் இன்று
டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்துடன் தூதரகங்கள் இணைப்பு
சென்னை:
டெல்லியில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் நாட்டிள் உள்ள 157வெளிநாட்டுத் தூதரகங்கள் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும் என்று மத்தியவெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் இன்டர்நெட் தளத்தைவெள்ளிக்கிழமை துவக்கி வைத்தபிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முற்றிலும் மிஷின்களால் அச்சடித்து பாஸ்போர்ட் வழக்கும் முறை விரைவில் நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும்.
தற்போது டெல்லியில் சோதனை முறையில் இவ்விதம் பாஸ்போர்ட்டுகள்வழங்கப்படுகின்றன. இந்த முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டவுடன்,நாடு முழுவதும் இம் முறை அறிமுகப்படுத்தப்படும்.
டெல்லியில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்துடன், நாட்டில் உள்ள 157வெளிநாட்டு தூதரகங்கள் கம்ப்யூட்டர் மூலம் விரைவில் இணைக்கப்படும்.
முதல் கட்டமாக அடுத்த ஆண்டுக்குள் 30 தூதரகங்கள் இணைக்கப்படும். இதன் மூலம்போலி பாஸ்போர்ட்டுகளை எளிதில் ஒழிக்க முடியும். மேலும் விசா வழங்கும்நடைமுறையும் எளிதாகும் என்றார் பாஞ்சா.