தமிழகத்தில் இன்று
"எங்களுக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்", சொல்கிறார் ராமதாஸ்
புதுவை:
தமிழகத்தில் எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் அதை ஏற்கமாட்டோம் என்று பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் ராமதாஸ் கூறினார்.
புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அமைச்சரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிஏற்படவேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தாது. மேலும், அமைச்சர் பதவி கொடுப்பதாகஅழைப்பு விடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் இருக்கும். புதுவையில் கடந்த ஆண்டுகளில் பலஆட்சிகள் அமைந்துள்ளன. 2001-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு புதுவையில் பாட்டாளி மக்கள் கட்சிதான்அமையும்.
எனது மகன் அன்புமணியை புதுவை முதல்வராக்க நான் முயற்சி மேற்கொண்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திவெளியாகியுள்ளன. இது முழுவதும் தவறான செய்தியாகும். இச் செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கலவரத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதான் முழு காரணம்.அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்போது ஆதாரங்களை நான்வெளியிடுவேன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 73 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை அரசு உடனேஅமல்படுத்தவேண்டும்என்றார் ராமதாஸ்.
முன்னதாக, ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் புதுவை சட்டப்பேரவை நோக்கிஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை நிலை ஆளுநர் ரஜனிராயிடம் சமர்ப்பித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications