தமிழகத்தில் இன்று
ரூ.60 லட்சம் கடன்: ஒரே குடும்பத்தில் 7 பேர் தற்கொலை
திருச்சூர்:
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள திருவானைக்காவில் இச் சம்பவம் நடந்துள்ளது.
வட்டிக் கடை நடத்தி வந்த சோமசுந்தரம் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 60 லட்சம் ரூபாய்க்கு கடன் இருந்தது.
பணம் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டு தொல்லைபடுத்தினர். மேலும், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும்கஷ்டமாக இருந்தது.
இதனால் மனமுடைந்த சோமசுந்தரம், குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன் படி சோமசுந்தரம் உள்பட குடும்பத்தினர் 7பேரும் வெள்ளிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
கடன் தொல்லை காரணமாக குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொண்டதாக சோமசுந்தரம் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications