தமிழகத்தில் இன்று
அலயன்ஸ் விமான என்ஜின்கள்: மத்திய அரசு விளக்கம்
டெல்லி:
அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களை இங்கிலாந்துக்கு இயக்கவேண்டாம் என்று அந்நாட்டு அரசு, இந்தியாவிலுள்ள தனது தூதரக அதிகாரிகளுக்குஅறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல்களை மத்தியஅரசு மறுத்துள்ளது.
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா விமான நிலையம் அருகே, சில நாட்களுக்கு முன்புஅலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வெடித்துச் சிதறியது. இதில் 60 பேர் வரை இறந்தனர்.இதையடுத்து இந்த வகை விமானங்களுக்கு என்ஜீன் சப்ளை செய்யும் இங்கிலாந்தின்ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாதுகாப்பு கருதி தனது விற்பனையை நிறுத்தியது.
இந்த நிலையில், தனது தூதரக அதிகாரிகள், அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களைப்பயன்படுத்த வேண்டாம் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள்வெளியாகின.
இதை, அலயன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வரும் இந்தியன் ஏர்லைன்ஸ்நிறுவனம் மறுத்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அலயன்ஸ்ஏர்லைன்ஸ் விமானங்களில் பிராட் அண்ட் வைட்னி ரக என்ஜீன்கள்தான்பயன்படுத்தப்படுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ் என்ஜீன்கள் இதில் பயன்படுத்தவில்லைஎன்று கூறப்பட்டிருந்தது.
அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களின் நிலை குறித்து லண்டனிலுள்ள இந்தியத்தூதரகத்திற்கும், சிவில் விமானத் துறை செயலாளர் ஏ.எச்.ஹங் கடிதம் ஒன்றையும்எழுதியுள்ளார்.
யு.என்.ஐ.