தமிழகத்தில் இன்று
பங்களாதேஷ் பிரதமரைக் கொல்ல குண்டு வைத்த 3 பேர் கைது
டாக்கா:
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை வெடிகுண்டு வைத்துக் கொல்ல முயன்ற 3 பேரை அந் நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கோபால்கன்ஜ் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் முகம்மது ஜாசிமுதீன் கூறியதாவது:
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோடலிபாரா என்ற இடத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் சனிக்கிழமை பேசஉள்ளார்.
கூட்டத்துக்கு வரும் பிரதமரைக் கொல்ல 76 கிலோ எடையுள்ள வெடிகுண்டை கூட்டம் நடக்கும் இடத்தில் வைக்க 3 பேர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகதகவல் கிடைத்தது.
உடனே தீவிர விசாரணை மேற்கொண்டதில் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வெகு அருகில் குண்டு வைத்திருந்த சிப்பிர் அகமத், ஜகாங்கீர் உசேன்,ஃபரீத்துஸ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு, செயலிழப்பு செய்யப்பட்டது. பிடிபட்ட மூன்று பேரும் கோபால்கஞ்ச் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
இச் சம்பவத்தை அடுத்து பிரதமர் பேச உள்ள கோபால்கஞ்ச் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் ஜாசிமுதீன்.
பொதுக்கூட்டம் நடைபெற இருந்த இடத்துக்கு அருகிலிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது குறித்து ஹசீனாவிடம் கூறியதற்கு, "நான் சாவைப் பற்றிபயப்படவில்லை. எது வருவதாக இருந்தாலும், அது வந்தே தீரும். எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது" என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications