தமிழகத்தில் இன்று
வருமான வரி சோதனையில் தவறில்லை என்கிறார் டால்மியா
கல்கத்தா:
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா வரவேற்றுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலத்தில் பலவகையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக சிபிஐவிசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா, மோங்கியா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வீடுகளில் ஒரே நேரத்தில்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இச் சோதனையில் பல ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமான வரித்துறை நடத்திய இச் சோதனையை ஜக் மோகன் டால்மியா வரவேற்றுள்ளார்.
இத்தகைய சோதனைகளின் மூலம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஊழலை ஓரளவாவது ஒழிக்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள களங்கத்தைப் போக்கும் வகையில் இச் சோதனை நடத்தப்பட்டிருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், தனிப்பட்டவிரோதத்தால் இத்தகைய சோதனை நடத்தப்பட்டால் அது தவறு என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications