தமிழகத்தில் இன்று
பாரதீய ஜனதா தலைவராகிறார் ஜனா.கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
பாரதீய ஜனதா கட்சியின் தற்பொழுதைய தலைவராக குஷாபாவ் தாக்கரே இருக்கிறார். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன்முடிவடைகிறது.
உடல் நலம் கருதி இவர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. அடுத்த தலைவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் ஜனா கிருஷ்ணமூர்த்தி, ஏக மனதாக தலைவராகதேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி. அரசியலிலில் மிகுந்த அனுபவம் மிக்கவர். பா.ஜ.கவிலும் சரி,பா.ஜ.க அரசிலும் சரி எந்த ஒரு முக்கிய முடிவுகளும் ஜனா.கிருஷ்ணமூர்த்தியை கலந்தாலோசித்தே எடுக்கப்படும்.
ஜனா.கிருஷ்ணமூர்த்தி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது. இம் மாத இறுதியில் அதாவது இன்னும் ஒரு சில தினங்களில்அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள் தமிழக பா.ஜ.கவினர்.
தமிழகத்தைச்சேர்ந்த சேர்ந்த ஒருவர்,அகில இந்திய பாரதீயஜனதா கட்சியின் தலைவராவதில் தமிழக பா.ஜ.க. வினர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications