தமிழகத்தில் இன்று
தியேட்டர் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை
கோவை:
தியேட்டர்களில் பராமரிப்புக் கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என தமிழ்நாடுதிரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் கோவை நீலகிரி மாவட்ட கிளை கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
டி.வி மற்றும் கேபிள் டி.விக்களின் ஆதிக்கத்தால், தியேட்டர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. பெரும் செலவில் பட விநியோக உரிமை பெற்று,தியேட்டர்களில் திரையிடப்படும்போது நஷ்டமே ஏற்படுகிறது. எனவே,தியேட்டர்களை சரிவர பரமாரிக்க இயலாமல் போகிறது.
தற்போது ஏசி தியேட்டர்களுக்கு பரமாரிப்புச் செலவாக
ரூ.2-ம், சாதாரண தியேட்டர்களில் பராமரிப்புக் கட்டணம் ரூ.1 ஆகவும் இருந்துவருகிறது. இதனை உயர்த்தினால், தேவையான அளவிற்கு சினிமா ரசிகர்களுக்கு வசதிசெய்து தர இயலும்.
தினமும் டி.விக்களில் செய்திகள் அவ்வப்போது வருவதால் பொதுமக்கள்,செய்திப்படங்களை திரையிடுவதை விரும்புவதில்லை. எனவே, அரசு செய்திப்படங்களை திரையிடுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications