For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

செய்தது குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்...போனது கை

கோவை:

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கை மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.

ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா என்ற இடத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி வள்ளி, கோவையில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு அவருக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் வீட்டுக்குச் சென்ற வள்ளியின் வலது கை திடீரென்று உணர்ச்சியற்றுப் போனது. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.

கையைப் பரிசோதித்த டாக்டர்கள், கையில் ரத்த ஓட்டம் குறைந்து விட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் கையை அகற்ற வேண்டும்.இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனக் கூறிவிட்டனர்.

இதையடுத்து வள்ளியிடம் எழுதி வாங்கிக் கொண்டு, அறுவை சிகிச்சை செய்து கையின் முன் பகுதியை எடுத்து விட்டனர். இக் கை பரிசோதனைக்குஅனுப்பப்பட்டுள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறால் கை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச் சம்பவம்பற்றி கருத்து தெரிவிக்க மருத்துவமனை டீன் சுப்பிரமணியம் மறுத்துவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X