For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

புரூலியா வழக்கில் ஆயுள் சிறை பெற்ற 5 லாட்வியர்கள் விடுதலை

கல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் ஆயுதங்களைப் போட்ட வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து லாட்வியா நாட்டு விமான ஊழியர்களின்தண்டனையை ரத்து செய்து குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ஐந்து பேரும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், ரஷிய அதிபர் விலாடிமிர் புடீனுக்கும் இடையே ஏற்பட்டஒப்பந்ததையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி புரூலியா நகர் மீது பறந்த விமானத்திலிருந்து சிலஆயுதங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து விமானத்தில் இருந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான இங்கிலாந்து நாட்டு ராணுவ அதிகாரி பீட்டர்பிளீச் இன்னும் ஜெயிலில்தான் உள்ளார்.விடுதலை செய்யப்பட்ட ஐந்துலாட்வியர்களும், கல்கத்தாவிலுள்ள ரஷிய தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அனைவரும் திங்கள்கிழமை ரஷியாவிற்கு புறப்படுவர் என்று தெரிகிறது.

விடுதலை செய்யப்பட்டவர்கள் விவரம்: அலெக்சாண்டர் கிளிச்சின், இகோர்திம்மர்மன், இகோர் மோஸ்கோவிதின், ஒலக் கய்டாஸ்ச், அன்டிமென்கோ.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X