தமிழகத்தில் இன்று
கடனைத் திருப்பிக் கட்டாத ராதாரவி வீட்டுக்கு சீல்
சென்னை:
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் நடிகர் ராதாரவி வீட்டை வங்கிஅதிகாரிகள் "சீல் வைத்தனர்.
நடிகர் ராதாரவிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் சொந்த வீடு உள்ளது. இந்தவீட்டில் தான் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார்.
நிறையப் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்த ராதாரவிக்கு சொந்த படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்காக இந்த வீட்டை இந்தியன் வங்கியில்அடமானம் வைத்து கடன் பெற்றார். அந்த பணத்தில் "தை மாசம் பூ வாசம், "இளைஞர்அணி, "இது நம்ம பூமி உள்பட சில படங்களை தயாரித்தார்.
துரதிர்ஷ்டவசமாக எந்த படமும் ஓடவில்லை. சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டவர்கள் பட்டியலில் சேர்ந்த ராதாரவியால், வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. இறுதியில் வீட்டை "சீல் வைக்கப் போவதாக வங்கியில்இருந்து நோட்டீஸ் வந்தது.
இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு அடையாரில் குடியேறினார் ராதாரவி.தற்போது இந்த வீட்டை முடக்கி சீல் வைத்துள்ளனர் வங்கி அதிகாரிகள். கடனைசெலுத்தாவிட்டால் வீடு ஏலத்திற்கு வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications