தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சியில் ரூ.16 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
கோவை:
கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ. 16 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை கேரளா நோக்கி ஒரு லாரிவேகமாகச் சென்று கொண்டிருந்தது.
சந்தேகக்தின் பேரில் அந்த லாரியைப் போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கேன்களில் 6 ஆயிரத்து500 லிட்டர் எரி சாராயம் இருந்தது.
இதையடுத்து, லாரி டிரைவர் பிஜு , காசிம் மற்றொரு பிஜு ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
ரூ.16 லட்சம் மதிப்புள்ள லாரி மற்றும் எரிசாராயத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications