தமிழகத்தில் இன்று
தலிபான்கள் தாக்குப்பிடிப்பது இனி கஷ்டம் என்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான் மதவாத அமைப்பு இனிமேல்தாக்குப்பிடிப்பது இனி கஷ்டம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
முஸ்லீம் அமைப்பான தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் பலவீனமடைந்துவருகிறது. நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் தலிபான்அமைப்பு தவறி விட்டது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
அவர்களது குறிக்கோளை எட்டுவதற்கு தலிபான்களுக்கு வாய்ப்புகள் மிகவும்குறைவாகவே உள்ளது என்று அமெரிக்காவின் தெற்காசிய விவகார துணை அமைச்சர்கார்ல் இன்டர்பர்த் கூறியுள்ளார்.
கிழக்கு மற்றும் தெற்காசியாவின் செயல்பாடுகள் குறித்து உயர்மட்டத் துணைக்குழுவில் பேசுகையில் அவர் இத் தகவலை தெரிவித்தார். தலிபானால் உள்நாட்டுப்போரையும் நிறுத்த முடியவில்லை. ஆனால் தொடர்ந்து புதிய சண்டைகள்தான்ஏற்பட்டு வருகின்றன. இது தவிர ஆப்கனில் உள்ள பெண்களின் உரிமைகளை நசுக்கிவருவதாக கூறினார்.
1998-ம் ஆண்டில் கென்யாவிலும் டான்ஜானியாவிலும் நடந்த குண்டு வெடிப்புக்குக்காரணமான ஒசாமா பின் லாடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு, பாகிஸ்தான்தலிபானிடம் கூற வேண்டும். பாகிஸ்தான் தலிபானுடன் நட்புறவு கொண்டுள்ளது.அதனால் பாகிஸ்தான் கூறினால் தலிபான் ஒப்புக்கொள்ளும் என அவர் கருத்துதெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications