For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"இன்டர்நெட்டில் இல்லாத மொழிகள் அழியும்

சிங்கப்பூர்:இன்டர்நெட்டில் இல்லாத மொழிகள் எதிர்காலத்தில் அழிந்து விடும் என்றுசிங்கப்பூரில் சனிக்கிழமை துவங்கிய தமிழ் இன்டர்நெட்-2000 மாநாட்டில்தெரிவிக்கப்பட்டது.மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரண்டு நாள் மாநாட்டைசிங்கப்பூர் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஜார்ஜ் இயோ துவக்கி வைத்துப்பேசியதாவது:

தமிழ் மொழி உலகம் முழுவதிலுமுள்ள 65 மில்லியன் மக்களை தினசரிசென்றடைகிறது. பொருளாதார அடிப்படையில் வலுவாக இல்லாவிட்டால், மிகச்சிறிய குழுவுக்குச் சொந்தமான ஒரு மொழியாக மட்டுமே தமிழ் மாறக் கூடியஅபாயமும் உள்ளது.

வாடிக்கையாளர் நிர்வாகம், பொருள் விநியோகம், திட்டமிடுதல் ஆகியவை தாய்மொழியிலேயே இருக்க வேண்டும். ஈ காமர்ஸ், தாய் மொழியிலேயே நடக்கவேண்டும்.

முன்பு இன்டர்நெட் உலகை ஆங்கிலம் ஆட்சி புரிந்து வந்தது. இது பலரைக்கவலைப்படுத்தியது. இப்போது அந்தப் பயம் போய் விட்டது. குறிப்பாகதமிழர்களுக்கு இந்தப் பயம் முற்றிலும் அகன்று விட்டது எனலாம். இன்டர்நெட்உலகில் காலடி வைத்த முதல் மொழிகளில் ஒன்று தமிழ்.

இன்டர்நெட்டின் 70 சதவீத ஆளுமை, ஆசிய மொழிகளின் கையில்தான் உள்ளது.தமிழ் தவிர, மாண்டரின், ஜப்பானிஸ், வியட்நாமிஸ், கொரியன், ஹிந்தி, தகலாக், தாய்ஆகிய மொழிகள் இன்டர்நெட்டில் வெற்றிகரமான மொழிகளாக உள்ளன.

1995-ல் சில நூறு இன்டர்நெட் தளங்களே தமிழில் இருந்தன. இன்று அது 2.50 லட்சம்தளங்களாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

இந்த மாநாட்டில், இந்தியா, இலங்கை, மலேசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியநாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X