தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அகதிகள் முகாமில் விடுதலைப் புலிகள் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம்:

செங்கல்பட்டிலுள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்தவிடுதலைப்புலிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் கப்பலில் ஆயுதங்களுடன் வந்த ஐந்து பேர் கைதுசெய்யப்படனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகள்என கூறினர்.

அவர்கள் மீது தற்போது கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. ஐந்து பேரும்செங்கல்பட்டில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐந்துபேரும் தங்கள் மீதான வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். தங்களுக்கு தங்கஇடம் அளிக்க வேண்டும். அல்லது ஏதாவது வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து முகாமில் உள்ள 20 அகதிகளும் உண்ணாவிரதம்இருந்தனர். உண்னாவிரதம் இருந்த 5 புலிகளில். முரளிதரன் (31),விவேகானந்தன்(57), பாலன் (44) ஆகிய மூன்று பேர் சோர்வடைந்தனர். இவர்களைடாக்டர் பிரமிளா பரிசோதனை செய்தார். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதம் இருந்த புலிகளிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதன் பின்பு விடுதலைப் புலிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+