For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வனபத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி விழா
கோவை:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஜூலை 24-ம் தேதி ஆடிக் குண்டம் திருவிழா நடக்கிறது.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பிரபலமான வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம், குண்டம் திருவிழாநடைபெறுகிறது.
கோவை, நீலகிரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜூலை 24-ம் தேதி காலையில் நடக்கும் இவ்விழாவில், அதிகாலையில் குண்டம் ( தீ மிதிக்க விறகுகள் அடுக்கப்பட்டு தணல் உருவாக்குதல்)வளர்க்கப்படும். பின்னர் காலையில் துவங்கும் இந்த குண்டம் இறங்கும் விழா (தீ மிதித்தல்) மாலை வரை தொடரும்.
தீ மிதித்தலையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 23, 2000, 5:30 [IST]