தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தொழில்நுட்பக் கோளாறினால் தரையிறங்கிய 2 அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள்
கல்கத்தா:
அந்தமான் தீவுகளின் தலைநகர், போர்ட்பிளேரில் உள்ள என்எஸ்சி போஸ் சர்வதேச விமானநிலையத்தில் இரண்டு அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள்தொழில்நுட்ப காரணங்களால் தரையிறக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலை கல்கத்தா வர வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறினால் போர்ட்பிளேர் விமான நிலையத்தில்தரையிறக்கப்பட்டது.
இதேபோல் திமாபூர் போயிங் விமானமும் தொழில்நுட்ப காரணங்களால் போர்ட்பிளேர் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சமீபத்தில் டெல்லி செல்லவிருந்த அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் பாட்னா விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் எஞ்சின் பழுதடைந்து கீழேவிழுந்து நொறுங்கியதும், அந்த விமான விபத்தில் 56 பேர் இறந்ததும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications