தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டாட்.காம் நிறுவன ஊழியர்கள் 5 பேர் கடலில் மூழ்கி சாவு
சென்னை:
சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றிருந்த இன்டர்நெட் நிறுவனம்ஒன்றின் சென்னை அலுவலக ஊழியர்கள் 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 30 பேர் ஞாயிற்றுக்கிழமை காலை மாமல்லபுரத்திற்குசுற்றுலா சென்றனர். பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்தனர். பின்னர் அவர்களில் 11பேர் மீனவர்களிடம் தங்களிடம் கட்டுமரத்தில் கடலுக்குள் கூட்டிச் செல்லுமாறுகூறியுள்ளனர்.
கடலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் படகு மூழ்கியுள்ளது. இதில் மாலதி (25), ஜீனாதாமஸ் (30), வசந்தி (35), ஸ்ரீவித்யா (23), பாபு கணேஷ் ஆகியோர் நீரில் மூழ்கிஇறந்தனர். 6 பேரை மீனவர்கள் மீட்டனர். இவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications