தமிழகத்தில் இன்று
ஜூலை 26-ல் நினைவு கூர்வோம் கார்கில் தியாகிகளை
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் மலைச் சிகரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவி ஒரு ஆண்டு ஆவதையொட்டி ஜூலை 26-ம் தேதி நாட்டுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் முன்பு மாலையில், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூறுமாறு மத்தியஅரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கார்கில் பகுதியில் தீவிரவாதிகளை விரட்டி இந்திய வீரர்கள் பெற்ற வெற்றியைக் கெளரவிக்கும் வகையிலும், உயிர்த் தியாகம் செய்த இந்தியவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஜூலை 26-ம் தேதியை கார்கில் தினமாகக் கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அன்றைய தினம், டெல்லி இன்டியா கேட் பகுதியிலுள்ள அமர் ஜவான் ஜோதியில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர்மலர் வளையம் வைத்து தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
அன்று மாலை, கார்கில் பகுதியில் பிடிபட்ட ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அக் கண்காட்சியை பிரதமர் வாஜ்பாய் துவக்கிவைக்கிறார். அதே போல, முதல் மெழுகுவர்த்தியையும் அவர் ஏற்றி வைக்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications