For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஜாதி சங்கங்களுக்குத் தடை வருமா?
சென்னை:
தமிழகத்தில் ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வன்முறையைத் தூண்டுவதற்கு ஜாதியையோஅல்லது மதத்தையோ யாராவது பயன்படுத்தினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்டம் வழி செய்கிறது.
ஜாதி மற்றும் மத அடிப்படையில் செயல்படும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்வதற்கு வழி உள்ளதா என்பது குறித்து மாநில அரசு ஆராயும்.
தமிழகத்தில் பண பலம் படைத்த அரசியல்வாதிகள் ஜாதிகளின் பெயரில் அரசியல் லாபம் அடைய திட்டமிடுகின்றனர். இதுபோன்ற ஜாதி, மதஅமைப்புகளிடமிருந்து மக்கள் விலகியே இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் அடைய அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 23, 2000, 5:30 [IST]