For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

முரளிதரன் சூறாவளியில் சின்னாபின்னமான தெ.ஆப்பிரிக்கா

காலே (இலங்கை):

இலங்கை அணிக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே காலே நகரில் நடந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 15 ரன்கள்வித்தியாசத்தில், இலங்கை வெற்றி பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த நான்காவது நாள்ஆட்டத்தில், இலங்கை வெற்றி வாகை சூடியது. முதலில் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில், 522ரன்களைக் குவித்திருந்தது. ஜெயவர்த்தனே 167 ரன்களும், கேப்டன் ஜெயசூர்யா 148 ரன்களும் விளாசியிருந்தனர். அட்டப்பட்டு 54 ரன்களும், வாஸ் 54ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை 238 ரன்களுக்கு இழந்து பாலோ ஆன் பெற்றது. கல்லினன் 114 ரன்கள் எடுத்ததேகுறிப்பிடத்தக்க விஷயமாகும். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக ஆடியது.

சனிக்கிழமை ஆட்ட நேர இறுதியில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.இருப்பினும் பிற்பகலுக்கு மேல் வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களுக்கு போட்டியைஇழந்தது தென் ஆப்பிரிக்கா.

ஜான்டி ரோட்ஸ் சிறப்பாக ஆடி 63 ரன்கள் சேர்த்து கிர்ஸ்டன் 55 ரன்களும், கல்லிஸ் 40 ரன்களும் எடுத்தனர். போயே 35 ரன்கள் சேர்த்தார்.

முரளிதரன் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார். சந்தனாவுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.

மொத்தம் மூன்று போட்டிகள் கொண்டஇந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை இப்போது முன்னணியில் உள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X