தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

விநாயகர் ஊர்வலத்தில் வன்முறைக்குத் திட்டமிட்ட 7 பேர் கைது

மதுரை:

திண்டுக்கல் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்திஊர்வலத்தின் போது வன்முறை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக இஸ்லாமியஇயக்கத்தைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பேகம்பூர் என்ற பகுதியில் இவர்கள் தலைமறைவாக இருந்தபோது கைதுசெய்யப்பட்டனர். அனைவரும் இஸ்லாமிக் ஜனநாயக அமைப்பு என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள்,போலி ஆவணங்கள், அரிவாள்கள், கத்திகள், ஜெலட்டின் குச்சிகள்,டெட்டனேட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அடிப்படைவாத அமைப்பானஅல் உம்மாவிற்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களைக் கைது செய்தபோது 7 பேரும் சேர்ந்து போலீஸாரைத் தாக்கமுயற்சித்தனர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் காயமடைந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அன்சாரி, கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவந்தவர். மற்றவர்கள் விவரம்: ரஹமத்துல்லா, ஹபிபுல்லா, மெளலானா ஹுசன்முகம்மது அஸ்ஸன், மைதீன் பாவா, ஜாக்கீர் ஹுசைன்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+