தமிழகத்தில் இன்று
வன்முறை ஒழிய வேண்டுமா?...யோசனை கூறுகிறார் வாழப்பாடி
பாண்டிச்சேரி:
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்முக்கியத் தலைவர்களான திருமாவளவன் மற்றும் குரு ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
பாண்டிச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் சீர்குலைக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. அதனால் அக்கட்சியில் உள்ளமத்திய அமைச்சர்கள் அனைவரையும் கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும்.
பதவி ஆசையில் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எனக்குப் பல விதங்களில்பிரச்சனைகளைக் கொடுத்து வருகிறார். அவர் பாட்டாளி மக்கள் கட்சியைக் கலைத்து விட்டு வன்னியர் சமூக மக்களின் நலனிற்காகத் நான்தொடங்கவிருக்கும் வன்னியர் கட்சிக்கு ஆதரவளித்தால், அதை நான் வரவேற்பேன்.
பாண்டிச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக 73 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன்.
பாண்டிச்சேரியில் ஒரேமாதிரியான விற்பனை வரி முறையை அமல்படுத்தினால் அது மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிப்பதுடன் வேலையில்லாத்திண்டாட்டத்தையும் ஏற்படுத்தும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications