தமிழகத்தில் இன்று
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது பிடியை இறுக்குகிறது சவூதி அரசு
துபாய்:
சவூதி அரேபியாவில் முறையான அனுமதியில்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான பிடியை சவூதி அரசு இறுக்கியுள்ளது.
இவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் சவூதி அரேபிய உயர் அதிகாரிகள் ஆகஸ்ட் 30 முதல் ஈடுபடுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதிஅரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம்:
உலகத்திலேயே சிறந்த எண்ணெய் வளமிக்க நாடு சவுதிஅரேபியா. இங்கு வாழும் மக்கள் தொகையில் 47 சதவீதம் பேர் வெளிநாட்டினர். அதாவதுவெளிநாட்டிலிருந்து சவுதிஅரேபியாவுக்கு வந்து வேலை செய்யும் மக்கள் 72 லட்சம் பேருக்கும் மேல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் போலி தஸ்தாவேஜூகள் மூலம் இங்கு வந்தவர்கள். மேலும் இங்கு வரும்போது பாஸ்போர்ட் மற்றும் பிறதஸ்தாவேஜூகளில் ஒரு வேலைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு இங்கு வந்து வேறு வேலை செய்கிறார்கள்.
இவர்களால் சவூதி அரேபிய மக்களின் வேலையில்லாத் திண்டாட்டம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசு அனுமதியின்றி இங்கு வந்து வேலை செய்பவர்களைஅடையாளம் கண்டறிந்து அவர்களை அவர்களது நாட்டிற்கே அனுப்பும் முயற்சியில் சவூதிஅரேபியா உயர்அதிகாரிகள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தொழிலாளர்களை இனம்கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதுவரை 3,50,000 பேர் அடையாளம்கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசுஅறிவித்துள்ளது.
யு.என்.ஐ.