For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
அராபத், பாரக்கிற்குக் கொலை மிரட்டல்
ஜெருசலேம்:
இஸ்ரேல் பிரதமர் எகுட் பாரக் மற்றும் பாலஸ்தீனிய தலைவர் யாசர் அராஃபத் ஆகியோரின் உயிருக்கு வலதுசாரி அமைப்பு மூலம் ஆபத்துஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமருக்கும் பாலஸ்தீனிய தலைவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் இந்த நேரத்தில் இக்கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த எச்சரிக்கையையடுத்து இஸ்ரேல் பிரதமர் எகுட் பாரக்கிற்கும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 23, 2000, 5:30 [IST]