தமிழகத்தில் இன்று
சிம்னி விளக்கை எரிந்து மனைவியைக் கொன்ற கணவர்
கோவை:கோவையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை எரித்துக் கொலை செய்ததாக கணவனைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை அருகே உள்ள போளுவாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (28). இவர் தனது மனைவிபேச்சியம்மாளுடன் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. ஒரு ஆண் குழந்தைமற்றும் பெண் குழந்தை உண்டு.
பேச்சியம்மாள் வேலைக்குச் சென்று வந்தார். வேலை முடிந்து மனைவி தாமதமாக வந்ததால், கிருஷ்ணகுமாருக்குசந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
தினமும் தகராறு வருவதால் வெறுப்படைந்த பேச்சியம்மாள், தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்து வந்தார்.ஆனால், அதற்கு அசராத கிருஷ்ணகுமார், தானே ஒரு நாள் தீ வைத்து கொளுத்தப் போவதாக கூறி வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அச்சமயம்,கிருஷ்ணகுமார் எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கை அவர் மீது வீசியதாகத் தெரிகிறது. தீக்காயமடைந்தபேச்சியம்மாள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி இறந்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாரைக் கைது செய்தனர்.கிருஷ்ணகுமார், தனது வாக்குமூலத்தில் மனைவியை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.












Click it and Unblock the Notifications