தமிழகத்தில் இன்று
பரூக் அப்துல்லாவிற்காக உயிரை விட்ட சிறுத்தை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்கு கோல்ப் மைதானம் கட்டப்படவிருந்தபூங்காவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சிறுத்தை பரிதாபமாக உயிரை விட்டது.
ஸ்ரீநகரில் உள்ளது செஷ்மஷாஹி விலங்கியல் பூங்கா. இந்த இடத்தில் முதல்வர் பரூக்கோல்ப் விளையாடுவதற்கு வசதியாக மைதானம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து அங்கு இருந்த 7 வயது பெண் சிறுத்தையை டார்ஜீலிங்கிற்கு மாற்ற அரசுமுடிவு செய்தது. இதற்கு ஸ்ரீநகரைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள்பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பூங்காவிலிருந்து சிறுத்தை வெளியேற்றப்பட்டால் அது இறந்து விடும். நான்கு மாதம் கூடதாக்குப் பிடிக்காது என்றும் அவர்கள் எச்சரித்தனர். இருப்பினும் அதைக் கண்டுகொள்ளாதுமே 18-ம் தேதி அந்த சிறுத்தை டார்ஜீலிங்கிற்கு மாற்றப்பட்டது. ஆனால் இரண்டு மாதம்கூட முடிவடையாத நிலையில் இப்போது அந்த சிறுத்தை பரிதாபமாக இறந்து விட்டது.
பிறந்தது முதல் இந்தப் பூங்காவில்தான் அந்தப் பெண் சிறுத்தை இருந்து வந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.