தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வேலை செய்த வங்கியிலேயே "கை வைத்த காஷியர்
கோவை:
வேலை செய்து வந்த வங்கியிலேயே பணத்தைக் கையாடல் செய்த காஷியரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை சர்ச் ரோட்டில் உள்ள பாங்கில் காஷியராகப் பணியாற்றி வருபவர் ஹரிநாத் பிரித்வி. இவர், கடந்த நான்குநாட்களுக்கு முன்பு பாங்க்கில் இருந்து ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
மறுநாள் பாங்கிற்கு அவர் வராததால், கணக்கு சரிபார்க்கப்பட்டது. அப்போது அதில் ரூ. 20 ஆயிரம் குறைந்ததுகண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கி மேலாளர் போலீசில் புகார் செய்தார்.
இந்தப் புகாரையடுத்து, சொந்த ஊரான குன்னூருக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த காஷியர் ஹரிநாத்தைப்போலீசார் கைது செய்தனர். இவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications