For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அடை மழையால் 50,000 அமர்நாத் யாத்ரீகர்கள் பரிதவிப்பு

பாகல்ஹாம் (ஜம்மு-காஷ்மீர்):

ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ள 50, 000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்பாகல்காம் மற்றும் பால்டால் பகுதிகளில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

ஜூலை 13 ம் தேதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதிலுமிருந்து 65, 000பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வந்து விட்டு தரிசனம் செய்து விட்டுத் திரும்பியுள்ளனர். இன்னும் 50,000 பேர் யாத்திரையில் உள்ளனர்.

தற்போது 5 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அமர்நாத் குகைக் கோவிலுக்கும் செல்ல முடியாமல், வீடுதிரும்பவும் முடியாமல் பரிதவித்து வருகின்றனர். யாத்திரைக்குச் செல்லும் பாதை மிகவும் வழுக்கலாக இருக்கிறது. பலத்த மழையினால் விபத்துக்கள்ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் பக்தர்கள் பாகல்ஹாம் மற்றும் பால்டால் ஆகிய இடங்களில் அவக்த சிக்கியுள்ளனர்.

பாகல்ஹாம்-சன்டான்வாரி சாலைப்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு பக்தர்கள் யாரும் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகள் பழுதுபார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X