தமிழகத்தில் இன்று
2 இந்தியர்களுக்கு மகசேசே விருது
மணிலா:
பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் இந்த ஆண்டுக்கான மகசேசே விருது 2 இந்தியர்கள் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த அருணா ராய்க்கு, கிராம மக்களின் உரிமைகள், அதை அவர்கள் எப்படிப் பெறுவது என்பது குறித்து கிராம மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தியக் குடிசைவாசிகள் சங்க நிறுவனர் ஜோக்கின் அற்புதம் மற்றொரு இந்தியர். சமுதாய மேம்பாட்டிற்கு உறுதுணை புரிந்ததற்காக இவருக்கு விருதுவழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, முன்னாள் பிலிப்பைன்ஸ் நாட்டு மேயர், ஜேசே ராபர்ட்டோ (அரசு சேவை விருது), இந்தோனேசியாவைச் சேர்ந்த ஏ.அஸ்ராட்மஜ்தா(பத்திரிக்கை), சீனாவைச் சேர்ந்த சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் லியான் கோன்ஜியும் (சமூக சேவை) விருது பெற்றுள்ளனர்.
பல்வேறு பிரிவுகளில் சேவை புரியும் ஆசியர்களுக்கு, முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிற












Click it and Unblock the Notifications