For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டொரன்டோ தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ரெடி

By Staff
Google Oneindia Tamil News

2 சீனர்கள் கைது: வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

ஹாஜிப்பூர் (மேற்கு வங்காளம்):

மேற்கு வங்க மாநிலம் ஹாஜிப்பூரில் 2 சீன நாட்டைச் சேர்ந்தவர்களை சுங்கத் துறைஅதிகாரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தபணத்தையும் பறிமுதல் செய்தனர்.

நேபாளத்திலிருந்து புத்தகயாவிற்கு சென்று கொண்டிருக்கும் ஒரு வாகனத்தில் சிலர்வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்க அதிகாரிகளுக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வைஷாலி மாவட்டத்தில் அவர்கள் நெடுஞ்சாலையில் சோதனையில்ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தை நிறுத்தினர். அதில் சோதனை செய்துபார்த்தபோது, அமெரிக்கா, தாய்லாந்து, நேபாளம் மற்றும் தைவான் நாட்டுப் பணம்ஏராளமாக சிக்கியது. வாகனத்தில் இருந்த இரண்டு சீனர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 34,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருள்களும்கைப்பற்றப்பட்டன.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X