தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அந்த 45 நிமிடங்கள்...

மும்பை:

சிவ சேனா தலைவர் பால் தாக்கரேக்கு எதிராக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த வழக்கை போய்வாடா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. இதையடுத்து கைதாகி 45 நிமிஷத்தில் தாக்கரே விடுதலை செய்யப்பட்டார்.

1992-93-ம் ஆண்டு மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரம் தொடர்பாக தனது பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினார் பால் தாக்கரே.

கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணைக் கமிஷன், பால் தாக்கரேயின் தலையங்கம் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்றும், பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்று தற்போதைய மகாராஷ்டிர அரசு பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி இது தொடர்பாக போய்வாடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்காக செவ்வாய்க்கிழமை காலை பால் தாக்கரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ் வழக்கை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் பி.பி. காம்ப்ளே விசாரித்தார். பால் தாக்கரே மீதான இவ் வழக்கு காலாவதியாகிவிட்டது.ஆகவே, வழக்கைத் தள்ளுபடி செய்வதுடன் பால் தாக்கரேவையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

பால் தாக்கரே சார்பில் வழக்கறிஞர் அடிக் ஷிரோத்கர் ஆஜரானார். பால் தாக்கரே மீதான இவ் வழக்கு 7 ஆண்டுகள் பழையதாகி விட்டது.

இந்த வழக்கு காரணமாக மும்பையில் பதற்றம் நிலவுகிறது. பால் தாக்கரேக்கு தண்டனை விதிக்கப்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்ஷிரோத்கர்.

சுமார் 45 நிமிடங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு வழக்கைத் தள்ளுபடி செய்தும் பால் தாக்கரேயை விடுதலை செய்தும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைக் கேட்டதும் நீதிமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த சிவசேனைத் தொண்டர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+