தமிழகத்தில் இன்று
வீட்டுல எலி...வெளியில புலி...
லண்டன்:
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி தங்களது முத்திரையைப் பதித்து வருகின்றனர்.
கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட நிறைய பணம் வழங்கப்படுகிறது. இதனால், பல வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட்கவுன்டி அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கங்குலி, திராவிட், கும்ப்ளே ஆகியோர் கவுன்டி அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
மூன்று பேரும் இந்திய அணிக்காக விளையாடியபோதும் நாட்டுக்காக விளையாடி பல வெற்றிகளைத் தேடித் தருவது போல கவுன்டி கிரிக்கெட்டிலும் தங்களதுஅணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்துள்ளனர்.
குறிப்பாக கென்ட் அணியில் விளையாடி வரும் திராவிட மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 137 ரன்களும், இரண்டாவது போட்டியில்73 ரன்களும் அவர் எடுத்துள்ளார். சராசரி 102.3 என்பது குறிப்பிடத்தக்கது.
லங்காஷயர் அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியும், லீசெஸ்டெர்ஷயர் அணிக்காக அனில் கும்ப்ளேவும் விளையாடி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications