தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
கணவருக்குக் கஞ்சா கொடுத்த கலி கால நங்கை
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு திருட்டுத்தனமாக கஞ்சா கொடுக்க முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கைதான பெண்ணின் பெயர் ஜெயந்தி (25). இவரது கணவர் வழிப்பறி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவரைப்பார்க்க ஜெயந்தி, சிறைக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் மீது சந்தேகப்பட்ட சிறைக் காவலர் ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினார். பிறகு பெண் காவலர்கள் அவரிடம் சோதனை செய்தனர்.அப்போது 15 கிராம் கஞ்சாவை ஜெயந்தி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. கணவருக்குக் கொடுப்பதற்காக கஞ்சா கொண்டுவந்திருந்ததாக ஜெயந்தி தெரிவித்தார்.
போலீஸார் ஜெயந்தியைக் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications