தமிழகத்தில் இன்று
சியாரோ லியோன் தீவிரவாதிகளிடமிருந்து நகரை மீட்டது ராணுவம்
பிரீடவுன்:
ஆப்பிரிக்க நாடான சியாரோ லியோனில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும்இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கினி நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள ஒருநகரத்தை தீவிரவாதிகளிடமிருந்து ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.
இது தொடர்பாக ராணுவ மேஜர் ஜான் மில்டன் கூறியதாவது:
ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுவருகிறது. இம் மோதலில் ராணுவ வீரர்களின் கை ஓங்கியுள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பஃபோடியா என்றநகரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர்இறந்தார். புரட்சிகர ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகளில் 11கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய நகரில் ராணுவ வீரர்கள் சோதனைமேற்கொண்டனர். அப்போது அங்கு நூற்றுக்கணக்கான மனித மண்டையோடுகள்கிடைத்தன.
கடந்த வாரம் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பின்டி என்ற நகரிலும்இதுபோன்ற ஏராளமான மனித மண்டையோடுகள் கிடைத்துள்ளன.
இவை, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மனிதர்களின் மண்டையோடுகளாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது என்றார் மில்டன்.