For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிக் பாக்கெட்டுகளை வைத்து மிரட்டுவதா?...கேட்கிறார் வாழப்பாடி

விழுப்புரம்:

பஸ் ஸ்டாண்டுகளில் பிளேடு போட்டு பிக் பாக்கெட் அடிக்கும் நபர்களை வைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள்கட்சித் தலைவர் ராமதாஸ் மிரட்டுகிறார். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த வன்னியர் சங்க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழப்பாடி ராமமூர்த்திபேசியதாவது:

ரவுடிகள், சாராயம் காய்ச்சுபவர்கள், பஸ்-ஸ்டாண்டில் பிளேடு போடுபவர்களை வைத்துக்கொண்டு மிரட்டல்விடுத்து வருகிறார் ராமதாஸ். இதைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்குஅஞ்ச மாட்டோம்.

ராமதாஸ் ரூ 5 க்கும் ரூ 10 க்கும் அல்லாடிக்கொண்டிருந்த போதே எம்.பியாக இருந்தவன் நான். எனது அரசியல்அனுபவம் உங்களது முக்கால்வாசி வயது. பைத்தியம் பிடித்தவர்களுக்கு எப்படி வைத்தியம் பார்க்க வேண்டும்என்று எங்களுக்குத் தெரியும்.

ராமதாஸ் அநாகரிகமாக அரசியல் நடத்தினால் நாங்களும் அநாகரிகமான அரசியலை நடத்துவோம். வீணாகவிளையாட வேண்டாம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல் தற்போது உங்களுக்குப் பணம்வந்திருக்கிறது. இதெல்லாம் நாங்கள் வாங்கிக்கொடுத்த டாடா சுமோக்கள். பலரிடம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணிவாங்கிய கார்கள் எல்லாம் நிரந்தரமானவை அல்ல.

இப்படி அரசியலில் ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் காணாமல் போனதுண்டு. நாங்கள் ராமதாசுக்கு சரியானபாடம் கற்பிப்போம். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ராமதாஸ் ஈடுபட்டால் அவரை நாங்கள்தமிழ்நாட்டிலேயே உலவ விட மாட்டோம்.

மக்கள் கைதட்டுவதற்காக இப்படிப் பேசவில்லை. நீங்கள் செல்லுகின்ற பாதை சரியில்லை என்பதைசுட்டிக்காட்டுகிறோம். விழுப்புரத்தில் என் மீது பலர் தாக்குதல் நடத்தினார்கள். எல்லா இடத்திலும் பாதுகாப்புகொடுத்த போலீஸ், விழுப்புரத்தில் பாதுகாப்பு கொடுக்கத் தவறி விட்டது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X