தமிழகத்தில் இன்று
மு.க.ஸ்டாலின் மீண்டும் இளைஞரணி செயலாளர்
சென்னை:
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதாக கூறப்பட்ட டி.ராஜேந்தருக்கு மீண்டும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் தி.மு.க வில் இணைந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோருக்கும் பதவிகள்வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க உள் கட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்டார்.
நிர்வாகிகள் விவரம்:
அமைப்புச் செயலாளர்கள்: கோவை.மு.ராமநாதன், பொன்.முத்துராமலிங்கம்
தலைமை நிலையச் செயலாளர்கள்: விடுதலை விரும்பி, மிசா.கணேசன்.
சட்டத்துறை செயலாளர்கள்: ஏ.எல்.சுப்ரமணியம், ஆலந்தூர் பாரதி.
கொள்கைப் பரப்புச் செயலாளர்: டி.ராஜேந்தர்.
தலைமை நிலைய சொத்துப் பாதுகாப்பு குழு தலைவர்: ப.உ.சண்முகம்.
மகளிர் அணி தலைவர்: பொற்செல்வி இளமுருகு.
தேர்தல் பணிக்குழு செயலாளர்கள்: கருப்பசாமி பாண்டியன், ரகுபதி.












Click it and Unblock the Notifications